உள்ளூர் வர்த்தகர்களை பாதுகாக்கும் சபை அறிமுகம்
இலங்கையின் உள்ளுர் வர்த்தகர்களை பாதுகாத்து ஊக்குவிக்கும் நோக்கில் அவர்களுக்கு தேவையான அறிவுசார் விடயங்களை மேம்ப்படுத்துவதற்கும்> பலமான மற்றும் வளமிக்க முயற்சியாண்மையை அபிவிருத்தி செய்வதன் ஊடாக சர்வதேச வியாபார உலகிற்கு நிகரான வர்த்தகர்களை கட்டியெழுப்புவதற்கும் என தேசிய வர்த்தகர்களை பாதுகாக்கும் சபை (NTPC) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
எங்களை பற்றி
உறுப்பினர்
நிகழ்வுகள்
கௌரவ தலைவரின் செய்தி
உள்ளூர் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (SMEs) சார்பாக மற்றும் தொழில் முனைவோர் வளர்ச்சிக்கு ஆதரவளிக்க உள்ளூர் வர்த்தகர்களை பாதுகாக்கும் சபை ஏப்ரல் 2021 இல் உருவாக்கப்பட்டதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி எம்முடன் இணைந்துள்ள வர்த்தகர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்களே இதற்கு பலமாக இருப்பதுடன் எமது எதிர்கால முயற்சிகள் எமது முயற்சிகள் மூலம் இலங்கையில் புதிய தொழில் முனைவோர் கலாசாரத்தை உருவாக்குவதற்கான பலத்தை எமக்கு வழங்கும் என நம்புகிறேன்.
ஜீ. மகேந்திர பெரேரா
தலைவர்
உள்ளூர் வர்த்தகர்களை பாதுகாக்கும் சபை
கௌரவ செயலாளரின் செய்தி
உள்ளூர் சிறிய மற்றும் மத்திய அளவிலான தொழில்முனைவோர் பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்த நிலையில் உள்ளூர் வர்த்தகர்களை பாதுகாக்கும் சபை இன் செயலாளர் பதவியை நான் ஏற்று இருந்தேன். நான் பதவி ஏற்ற நாள் முதல் உள்ளூர் சிறிய மற்றும் மத்திய அளவிலான தொழில்முனைவோர் நலன் கருதி பல்வேறு வேலைதிட்டங்களை சபை இன் ஊடாக நடைமுறைப்படுத்தியதுடன் உள்ளூர் வர்த்தகர்களை பாதுகாக்கும் நோக்கில் முழுமையான ஆதரவினை எதிர்காலத்திலும் வழங்க உள்ளதை தெரிவித்துக்கொள்கின்றேன்
லலித் லொக்குகே
செயலாளர்
உள்ளூர் வர்த்தகர்களை பாதுகாக்கும் சபை
Latest Events
- இலங்கையில் தொழில்முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கான தீர்வுகளைக் கண்டறிதல்
- வங்கிகள் மற்றும் குத்தகை நிறுவன மாஃபியாக்கள் குறித்து தொழில்முனைவோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
- உணவு மற்றும் பானங்கள் அல்லது வேறு எந்த வணிகத்தின் வர்த்தக பணி
உள்ளுர் வர்த்தகர்களை பாதுகாக்கும் நோக்கில் நாம் இதுவரை மேற்க்கொண்ட நடவடிக்கைகள்
நாட்டின் நெருக்கடியான சூழ்நிலைகளின் போது உதாரணமாக ஏப்ரல் 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மற்றும் கொவிட் பெருந்தொற்று நிலைமைகளின் போது வங்கிகள் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்கள் வர்த்தகர்களுக்கு மேலதிக கடன் மீள செலுத்தல் சலுகை கட்டணத்தை நீடிக்க முன்வரவில்லை. இலங்கை மத்திய வங்கி இந்த நிதி நிறுவனங்களை முறைமைப்படுத்தலை மேற்கொள்ளவில்லை. NTPC ஆனது மத்திய வங்கியின் நிதிக்குழு> மத்திய வங்கியின் ஆளுநர்> நிதி அமைச்சர்> நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதி செயலாளர் ஆகியோருக்கு எதிராக ரிட் பிரேரணை ஒன்றை பெற்றுக்கொண்டது.