உள்ளுர் வர்த்தகர்களை பாதுகாக்கும் நோக்கில் நாம் இதுவரை மேற்க்கொண்ட நடவடிக்கைகள்
-
நாட்டின் நெருக்கடியான சூழ்நிலைகளின் போது உதாரணமாக ஏப்ரல் 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மற்றும் கொவிட் பெருந்தொற்று நிலைமைகளின் போது வங்கிகள் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்கள் வர்த்தகர்களுக்கு மேலதிக கடன் மீள செலுத்தல் சலுகை கட்டணத்தை நீடிக்க முன்வரவில்லை. இலங்கை மத்திய வங்கி இந்த நிதி நிறுவனங்களை முறைமைப்படுத்தலை மேற்கொள்ளவில்லை. NTPC ஆனது மத்திய வங்கியின் நிதிக்குழு, மத்திய வங்கியின் ஆளுநர், நிதி அமைச்சர், நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதி செயலாளர் ஆகியோருக்கு எதிராக ரிட் பிரேரணை ஒன்றை பெற்றுக்கொண்டது.
-
சிரேஸ்ட வழக்கறிஞர்கள் ஊடாக உள்ளுர் வர்த்தகர்களுக்கு தேவையான நீதி ஆலோசனை சேவை ஏற்பாடு செய்யப்பட்டது.
-
முயற்சியாண்மை தொடர்பான சிரேஸ்ட வளவியலார்களின், ஆலோசனையாளர்களின் உதவியுடன் வர்த்தகர்களுக்கு தேவையான முயற்சியாண்மை அபிவிருத்தி கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
-
வர்த்தகர்களுக்கு மிகவும் பாதிப்பகளை ஏற்படுத்துகின்ற 1990 ஆம் ஆண்டு 02, 04 ஆம் இலக்க பராட்டே சட்டம் தொடர்பாக எதிர்கட்சிகள் இதர கட்சிகள் மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தமை.